×

நடிகையின் பியூட்டி பார்லர் மீது துப்பாக்கிச்சூடு : மும்பை மாபியா கும்பல் கைவரிசை?

திருவனந்தபுரம்: கொச்சியில் பட்டப்பகலில் நடிகையின் பியூட்டி பார்லர் மீது 2 பேர் துப்பாக்கிச்சூடு நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுகொச்சியைச் சேர்ந்தவர் லினா மரியா பால். இவர் மோகன்லாலின் ரெட் சில்லீஸ் மற்றும் ஹஸ்பெண்ட்ஸ் இன் ேகாவா உட்பட பல படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். இவர் கொச்சி பனம்பிள்ளி நகரில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். சென்னை கனரா வங்கியில் ₹18 கோடி மோசடி செய்ததாக இவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று மாலை 3.30 மணியளவில் பைக்கில் வந்த 2 பேர் பியூட்டி பார்லரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். சத்தம் கேட்டு அங்கு இருந்தவர்கள் அலறினர்.

சம்பவத்தின்போது நடிகை கடையில் இல்லை. 2 பெண் ஊழியர்கள் மட்டும் இருந்தனர். உடனடியாக இருவரும் பைக்கில் தப்பி சென்றனர்.இதுகுறித்து கொச்சி ேபாலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கடந்த சில நாட்களுக்கு முன் மும்பை மாபியா கும்பல் தலைவனான ரவி புஜாரா என்பவர் லினாவிற்கு போன் செய்து 25 ேகாடி ரூபாய் கேட்டதாக கூறப்படுகிறது. பணம் கொடுக்க முடியாது என்று கூறிய அவர் கொச்சி போலீசில் புகார் அளித்தார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் நடிகையை கொல்ல இந்த கும்பல் வந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.பியூட்டி பார்லர் அருகே ஒரு பேப்பர் கிடந்தது. அதில், ரவி புஜாரா குறித்த சில தகவல்கள் குறிப்பிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இந்த பகுதியில் பட்டப்பகலில் நடந்த துப்பாக்கிச்சூடு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Shootings ,actress ,beauty parlor ,Mumbai Mafia , Lina Maria Paul, Beauty Parlor, Gunfire
× RELATED நீதிமன்றத்தில் கூட பாதுகாப்பில்லை...